டெல்லி: பறவைக்காய்ச்சல் பீதி எதிரொலியாக டெல்லிக்கு கோழி உள்ளிட்ட பறவைகளை கொண்டு வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. டெல்லியில் பெரிய அளவிலான காசிப்பூர் கோழிப்பண்ணை, மார்க்கெட், பறவை இறைச்சி கூடங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களுக்கு பறவைகளை கொண்டு வர தடை விதித்து டெல்லி மாநில அரசு ஆணையிட்டுள்ளது